உதட்டில் சிரிப்பும் உள்ளத்தில் வஞ்சகமும் உள்ள மனிதர்களை நம்பி ஏமாந்து விட்டீர்களா?
Poiyana Uravugal Tamil Quotes – பொய்யான உறவுகளின் கவிதைகள் | poiyana uravugal status in tamil | uravugal poiyana pasam kavithai images.
பொய்யான உறவுகளிடம் உண்மையான அன்பை செலுத்தி ஏமாந்தவர்கள் ஏராளம். அவர்கள் வரும்காலத்தில், உண்மையான அன்பு கிடைத்தால் கூட அதை சந்தேகிக்கிறார்கள். பொய்யான உறவு என தெரிந்தபின் வரும் வலியும், ஏமாற்றமும் மிக கொடியது. (poiyana uravugal status in tamil | uravugal poiyana pasam kavithai images)
Poiyana Uravugal Tamil Quotes
Here is the list of 30+ poiyana uravugal tamil quotes and kavithai images. You can use this for your poiyana uravugal status in Tamil.
அன்பை எதிர்பார்த்து காத்திருக்கும் என் இதயத்தை
நொறுக்கிவிட்டது இந்த பொய்யான உறவு…
எந்த ஒரு தவறுமே செய்யாவிட்டாலும்
சில புரிதல் அற்ற உறவுகளால்,
நாம் வலிகளோடு வாழவேண்டியுள்ளது!
ஒரு துளி அன்பை காட்டி
பல துளி கண்ணீரை
சிந்தவைத்து விடுகின்றனர்
இந்த பொய்யான உறவுகள்…
ஒருவரிடம் அதிக அன்பு வைத்து ஏமாந்து விடாதே!
ஒருவரின் அன்பை பெற்ற பின், அவரை ஏமாற்றி விடாதே!!
நாம் அளவுக்கு அதிகமாக
அன்பு வைக்கும் இடத்திலே
ஏமாற்றமும், கண்ணீரும்
நிச்சயம் இருக்கும்.
இனி புதிதாக யாரும் என் வாழ்வில்
வர வேண்டாம் என நினைக்கிறேன்.
உள்ளம் சொல்கிறது சோகங்கள் போதுமென்று.!
உலகிலேயே மிக மிக கொடியது…
நாம் அதிகமான அன்பு செய்தவர்,
இறுதியில் பொய்யான உறவு
என தெரியும்போது…
வேஷம் போடும் உறவுகளுக்கு
நடுவே உண்மையான பாசம்
தோற்றுத் தான் போகிறது!
ஆனால் எத்தனை முறை ஏமாந்தாலும்,
இந்த இதயத்திற்கு தான் தெரியவில்லை…
அது பாசம் இல்லை வேஷம் என்று..!
பல நேரம் உண்மையான உறவிற்காக
மனம் ஏங்குகிறது..
சில நேரம் எதற்காக இந்த உறவு என்று
நினைக்கத் தோன்றுகிறது!
உண்மையான உறவுக்கு
விட்டுக் கொடுங்கள்…
தேவைக்கு பழகும் உறவுகளை
விட்டு விடுங்கள்…
மகிழ்ச்சியாக இருக்கும் இதயத்தை
துளைக்கும் கூர்மையான ஆயுதம்
பொய்யான உறவு..!!
பொய்யான உறவுக்கு கிடைக்கும் மதிப்பு கூட
உண்மையான உறவுக்கு கிடைப்பதில்லை…
அன்பு இல்லனா கூட பரவாயில்லை
ஆனா பொய்யா மட்டும் பேசாதீங்க!
நாம் மாறிவிட்டோம் என சொல்வதை விட
சில வலிகள் நம்மை மாற்றிவிட்டது
என்று சொல்வதே சரியானது.
பொய்யான உறவுகளின் கவிதைகள்
பொய்யான உறவுகளின் கவிதைகள் | போலியான அன்பு கவிதை | பொய்யான பாசம் | thevaiku palagum uravugal quotes in tamil – nandri ketta uravugal quotes in tamil – uravugal poiyana pasam kavithai.
என்னதான் அன்போடு அணைத்தாலும்
கத்தி நம்மை வெட்ட தான் செய்யும்..
சில உறவுகளும் அப்படித்தான்….
எவ்வளவு அன்பு காட்டினாலும்
கடைசியில் நம்மை காயப்படுத்தி விடுவார்கள்!!
தன் காரியத்திற்காக பழகும் உறவை விட
எந்த காலத்திலும் நம்மை கைவிடாத உறவே சிறந்தது.
பழகிய பின்பு தான் தெரிகிறது
சிலரின் அன்பு பொய்யானது என்று
பாசத்தின் வேஷத்தினால்
மனம் வலிக்கும்போது தான் புரிகிறது…
என் இதயம் இரும்பு அல்ல
மெழுகு என்று..!
துரோகிகளே அதிகம் வாழும்
இந்த உலகில்…
உண்மையான அன்பிற்கு ஏங்கும்
இந்த மனதிற்கு,,
மிஞ்சியது என்னவோ
வலியும் கண்ணீரும் தான்.
என்ன தான் உரிமையோடு பழகினாலும்
உணர்வுகளை மதிக்காமல் இருக்கும் சிலரால்
உறவுகள் பிரிந்து விடுகின்றன…
வாழ்க்கையில் பாதியில் வந்து
பாதியில் விட்டுச்செல்லும் உறவைவிட,
என்றுமே கூடஇருக்கும் உறவே சிறந்தது.
நீதான் முக்கியம் எனக் கூறிய உறவு
யார் நீ என கடைசியில் கூறும் போது,
என்னிடம் இருப்பது..
வலியுடன் கூடிய ஒரு புன்னகை மட்டுமே!
ஆழமான ஆற்றில் இறங்குவதும்
ஆழமான அன்பில் இறங்குவதும்
ஒன்று தான்…
கரை சேர்வது கடினம்
தன் செயலை மட்டுமே
நியாயப் படுத்தும் ஒருவரால்,
ஒரு போதும் உணர்வுகளை
புரிந்து கொள்ள முடியாது
ஒரே வார்த்தையில்
மனதை உடைப்பது எல்லாம்,
இந்த பொய்யான அன்பிற்கு
மட்டுமே சாத்தியம்…
உண்மைக்கும் பொய்க்கும்
இடையிலான யுத்தத்தில்,
நசுங்கிப் போனது என்னவோ
என்னுடைய இதயம் மட்டும் தான்!